வியாழன், மே 15, 2014

அமுக்ரா சூர்ணம் சாப்பிட்டால் பாலுணர்வு அதிகமாகுமா ?

அமுக்கராச் சூரணம்
சித்த வைத்திய திரட்டு


ஆதாரப் பாடல் :
                “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
                   குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
                   தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
                   தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
                  வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
                 விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
                நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
                நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
               செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி
                          -       அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360

சேரும் பொருட்களும் அளவும் :


இலவங்கம்                 0.39 %                   சிறுநாகப்பூ                  0.79 %                  
ஏலம்                                 1.57 %                   மிளகு                              3.15 %
திப்பிலி                           6.30 %                   சுக்கு                                   12.60 %
அமுக்கரா வேர்       25.20 %                 சர்க்கரை                        50.00 %


அளவும், துணை மருந்தும் :

1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், விக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும்

குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

சித்த அமுக்ரா சூரணம் என்று கடைகளில் கிடைக்கும் சித்த மருந்தும் -அஸ்வகந்த  சூர்ணம் என்று கிடைக்கும் ஆயுர்வேத மருந்தும் ஒன்றில்லை ..

உடல் பலஹீனத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் வெட்டை சூட்டை தணிக்கும் .

உடலுக்கு ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாது குன்ம நோய் -உடல் எரிச்ச்சலை போக்கும் 

ஒருதடவைக்கு  கிட்டதட்ட பத்து கிராம் எடுத்து உபயோகிப்பது நல்லது ..

கை கால் வலிகளுக்கும் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தரும் 

குறைந்தது ஒரு மண்டலமாவது சாப்பிட்டால் மட்டுமே பலனை உணர முடியும் .

பல பற்ப சிந்தூரங்களுக்கு கலந்து கொடுக்கும் தாய் மருந்தாக -Base மருந்தாக இதனை பயன்படுத்தலாம் .

பாலியல் உணர்வை வளர்க்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை 

இதில் கலந்திருக்கும் சர்க்கரை என்பது நாட்டு சர்க்கரை மட்டுமே 




Post Comment

ஞாயிறு, மே 11, 2014

பிணி -பணி -இனி ..

இயற்கை ஒரு போதும் தனது கடமையை செய்ய தவறுவதில்லை  ...என்றார் நம்மாழ்வார் அவர்கள் ....

பிணி நீக்கும் பணியில் ..ஒய்வு கிடைக்கும் போது எழுதினால் போதும் என்று சிறிய இடைவேளை எடுத்தது பெரிய இடைவேளை ஆகி போனது ..இந்த எண்ணத்தை மாற்றிட சொன்ன விஷயம் இது தான் ..

இரண்டு நாளைக்கு முன் ஒரு தொலை பேசி அழைப்பு ..

சார் நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் ..மிக்க நன்றி  என்றார் அவர் ...நன்றி சொல்லும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்றேன் அவரிடம் ..எனக்கு வயது ஐம்பத்து ஒன்று  ..எனது மனைவிக்கு வயது நாற்பத்தி ஒன்று ..திருமணமாகி இருபத்தி மூன்றாண்டுகள் ஒடி விட்டது ..பார்க்காத வைத்தியமில்லை ..செய்யாத செலவுமில்லை ..டெஸ்ட் ட்யூப் பேபி கூட பொய்த்து போனது ...நம்பிக்கை பொய்த்து போனது ..ஆறு மாதம் முன் உங்களது ஆயுர்வேத மருத்துவ தளம் படித்தேன் ..அதில் உள்ள ஒரு மருந்தை உங்களிடம் கேட்காமலே சாப்பிட்டு வருவோம் என்று ( பல சர்பிஸ் என்னும் நெய் மருந்து அது ) எனது மனைவியை மூன்று மாதம் சாப்பிட சொன்னேன் ..அவர்களும் அதை சாப்பிட்டு வந்தார்கள் ..நானும் உங்களது தளத்தில் உள்ள ஒரு மருந்தை எடுத்து  வந்தேன் ..இப்போது எனது மனைவி கரு உண்டாகி இருக்கிறார்கள் 
கரு வளர்ச்சி நன்றாக இருப்பதாக ஒரு பெண் மருத்துவரும் உறுதி படுத்தி உள்ளார்கள் ..பிரதி பலன் பாராமல் நீங்கள் எழுதிய ஒரு கட்டுரை எங்களை எவ்வளவு சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது ..என்றார் ..சார் ஒரே ஒரு விண்ணப்பம் ..என்ன என்றேன் ?..நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் ..இடைவேளை விடாமல் எழுத வேண்டும் ..நிச்சயம் எல்லோருக்கும் பலன் தரும் ..மருத்துவர் அல்லாது பலர் மூலிகை பற்றி எழுதும் போது அத்துறை உள்ள நீங்கள் மட்டுமே சரியான தகவலை தர முடியும் ..எழுதத்தான் வேண்டும் என்றார் ..

பிணி நீக்கும் பணியே -என் பணி என்றிருந்தேன் ..எழுத்துக்களும் பிணி தீர்க்கும் என்று உணர்த்திய  அவரது  வேண்டு கோளுக்கு இணங்க ..
பிணி -பணி -இனி -கட்டுரைகள் தொடரும் ..



Post Comment