சனி, ஜூலை 08, 2017

புதிய பதிவுக்கு –ஒரு மாத காலம் பொறுத்திருக்கவும் ..

புதிய பதிவுகள் சிறிது இடைவேளைக்கு பிறகு ..


டாக்டர். அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA






  •  வேலை பளு காரணமாக என்னால் தொடர்ந்து இன்னும் ஒரு மாத காலம் ( ஆகஸ்ட் 2017 முதல் வாரம் வரை ) புதிய பதிவுகள் எழுத இயலாது..



  •  பழைய பதிவுகள் மட்டும் மீள் பதிவுகளாக பதிவிடப்படும்


  • பின்னோட்டம் ,கமென்ட் ,விமர்சனம் –இன்னும் ஒரு மாத (ஆகஸ்ட் 2017 முதல் வாரம் வரை ) காலத்திற்கு பதில் எழுத இயலாது ..






எப்போதும் போல் மருத்துவ ஆலோசனை ,சேவை தொடரும் ..


சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )

Post Comment

சனி, ஜூலை 01, 2017

வாழ்வியல் நோய்களில் ஹோமியோபதி மருத்துவத்தின் வெற்றிகரமான பங்கு

வாழ்வியல் நோய்களில் ஹோமியோபதி மருத்துவத்தின் வெற்றிகரமான பங்கு



டாக்டர். G. வர்தினி .,BHMS.,
டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS


Efficacy of Homeo In Life Style Disorders



தொற்றா நோய் கூட்டங்களில் திறன் மிகு ஹோமியோபதி மருத்துவத்தின் சிறந்த பலன்கள்



கடந்த சில வருடங்களாக வாழ்க்கை முறை சீர்குலைவுகள் ஒரு துன்பகரமான வளர்ச்சியில் இருந்து வந்திருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களுடன், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையே  இதற்கு மூலகாரணம். அதிலும், இன்றைய சூழலில் சரியான விழிப்புணர்வு இல்லாத நிலைமைகளும் இன்னும் மோசமாகிவிட்டது. இதற்கு விழிப்புணர்வு கொடுத்தாலும் அதை போட்டியிட்டு மற்ற செயல்களும் நம்மை நம்பமுடியாமல் ஆக்கிவிட்டன.

அதனால் கிட்டத்தட்ட ஓவ்வொரு நிமிடங்களும் யாரோ ஒருவர் (Life Style Disorder) வாழ்க்கை சீர்குலைவுகளால் பாதிக்கப்படுகின்றனர் ஆரோக்கியமற்ற  மற்றும் இறுக்கமான வாழ்க்கை முறையானது உடல் பருமன் மற்றும் நிரிழிவு நோய் ஆகியவற்றை அதிகரித்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வயதினரும் உடல்பருமன் மற்றும் நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கவலை மற்றும் மன அழத்தம் அதிகரித்து வருகின்றன்.



வாழ்க்கை சீர்குலைவு நோய்கள் (Life Style Disorders) :-

🌸 Alzheimer’s Disease (அல்சைமர் நோய்)

🌸 Stroke (பக்கவாதம்)

🌸 Arteriosclerosis (ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ்)

🌸 Hypertension (உயர் இரத்த அழுத்தம் )

🌸 Hypothyroidisn (தைராய்டு)

🌸 Cancer (புற்றுநோய்)

🌸 Cardiac Problems (இதய பிரச்சினைகள்)

🌸 Renal Failure (சிறுநீரக செயலிழப்பு)

🌸 Chronic Liver Problem (நாள்பட்ட கல்லீரல் பிரச்சனை)


இந்த வாழ்நாள் சீர்குலைவுகள், சிகிசையளிக்கப்படவில்லை என்றால், ஒரு மனிதனின் வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிடும்.

   
வாழ்க்கை சீர்குலைவு நோய்களின் காரணங்கள் :-

🌸 மன அழுத்தம்

🌸 அறியாமை

🌸   மோசமான உணவுகள்

🌸    உடற்பயிற்ச்சி இல்லா நிலை

🌸    வாழ்க்கை முறை மாற்றம்

🌸    Poor Posture

🌸    சுற்றுசூழல் நிலைமைகள்

🌸     Occupational Disorders

பல வாழ்க்கை முறை சீர்குலைவுகள் நமது தொழில் வாழ்க்கையாக (Occupational Life Style) மாற்றப்படுகின்றது. இப்போது குழந்தைகளும் வெளிப்புற விளையாட்டுகளில் ஆர்வம் குறைந்து வீட்டிலேயே Mobile Phone - ல் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகள் இருந்த இடத்தில் துரித உணவுகள் மாறியுள்ளன. இதனால் நீங்கள் கற்பனை செய்ய முடியாத இடத்தில் குழந்தைகள் அதிக பருமனாகவும் , நீரிழிவு நோயுடனும் பிறக்கின்றன.


மன அழுத்தம் மற்றும் பதட்டம் பல வாழ்க்கை சீர்குலைவுகளை துண்டலாம். எனவே, மூல காரணத்த பொறுத்தே ஒரு பயனுள்ள சிகிச்சை பெறலாம்.


ஹோமியோபதியில் ஒரு நோயை, மேலோட்டமாகவோ அல்லது அதனின் பெயர் அடிப்படையில் சிகிச்சையளிக்கபடவில்லை இது நோயாளியை காட்டிலும் நோயாளியின் நோயை குணப்படுத்திவிடும்.


இது ஒரு முழுமையான அணுகுமுறையோடு கையாளும் ஒரு சிகிச்சை. ஒரு குறிப்பிட்ட அறிகுரியைக்கையாளும் சமயத்தில் ஹோமியோபதியில் Miasm கருத்தில் கொள்ளப்படுகிறது. இந்த மருந்துகள் இயக்கவியல் மற்றும் ஆற்றல்மயமாக்கல் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இது மருந்துகளின் நச்சு மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை மிகவும் குறைக்கிறது, இதனால் மருந்துகளின் உள்ளார்ந்த குணப்படித்தும் திறன் அதிகரிக்கிறது. இதனால் ஹோமியோபதி மருந்துகள் ஆரோக்கியமாகவும் மற்றும் பக்கவிளைவுகளும் இல்லை.


நீரிழிவு, உயர் இரத்த, தைராய்டு,  மன அழுத்தம் போன்ற நோய்கள் வெற்றிகரமாக ஹோமியோபதியில் சிகிச்சையளிக்கபடுகிறது.



நோய்க்கான சிகிச்சை தவிர ஹோமியோபதியில் நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்கவும் செய்கிறது. ஹோமியோபதியில் நோய்களை பெயர் கொண்டு மட்டும் சரி செய்யாமால் உடல், மனம், மற்றும் உணர்வு ஆகியவற்றையும் சமன் செய்ய உதவுகிறது. இதனால் மன அழுத்தம் தொடர்பான நோய்களையும் நல்ல முறையில் குணமடைய செய்கிறது.



ஹோமியோபதியால் பல அற்புதங்களை செய்ய முடியும். ஒரு மனிதனின் நோயின் ஆணிவேர் வரை குணமடைய செய்வதனால் சிறிது கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். ஹோமியோபதி சிகிச்சையில் பொறுமை வேண்டும். சிறந்த ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை இருந்தால் வாழ்க்கை முறை சீர்குலைவுகளிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.



 சிறந்த ஆயுஷ்ஹோமியோபதி மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333 ( டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS )
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை –டாக்டர் .G. வர்தினி .,BHMS


Post Comment

மிக சிறந்த ஹோமியோபதி மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி ?

மிக சிறந்த ஹோமியோபதி மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி ?


டாக்டர். G. வர்தினி .,BHMS.,
டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS 



How To Select Who Is Best Doctor In Homeopathy


இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மருத்துவமனை உள்ளது. அதிலும்  குறிப்பாக ஹோமியோபதி மருத்துவமனை  அதிகம். ஹோமியோபதி   மருத்துவம் என்பது அனைத்து மருத்துவத்தை விடவும் தனி சிறப்பு    வாய்ந்தது. அதனால்  அம்மருத்துவமானது அம்மருத்துவரை அன்றி  பிறரால்   சரிவர பரிந்துரைக்க முடியாது. ஏன்னென்றால் இம்மருந்துகளின் அளவு , வீரியம்நேரம் அனைத்தும்  5,1/2  ஆண்டு ஹோமியோபதி   மருத்துவத்தை பயின்ற மருத்துவரால் மட்டுமே முடியும் .


அப்பேற்பட்ட மருத்துவரை தேர்ந்து எடுப்பது எப்படி ?


நாம் ஹோமியோபதி  மருத்துவரிடம்  என்ன எதிர் பார்க்க வேண்டும் :-


ஒரு நோயாளி தன்  பிரச்சனைகளை கூறும் போது நடுவில்  இடையூரு  செய்யாமல் அதை கூர்ந்து கவனிப்பவராக இருத்தல் வேண்டும்.


மேலும்  அம்மருத்துவரின்  கேள்விக்கு  ஆம்இல்லை என்று நோயாளி பதில்  கூறக்கூடாது,   அப்படிப்பட்ட கேள்விகளை அவர் கேட்பவராய் இருத்தல்  வேண்டும்.


மேலும் நோயாளி ஏதேனும் சந்தேகம் கேட்டால்அந்த  மருத்துவர் கோபத்தையோஎரிச்சலையோ  காட்டாமல் பொறுமையாக பதில் அளிக்க வேண்டும்.


நோயாளின் அனைத்து சந்தேகங்களை போக்கவே   ஹோமியோபதியின் கலை என்று நோயாளி உணரும் வண்ணம் இருத்தல் வேண்டும்.




மிக சிறந்த ஹோமியோபதி மருத்துவர் கடைபிடிக்க வேண்டியது :-


நல்ல ஹோமியோபதி மருத்துவர் அதிகமான மருந்துகளை பரிந்துரைக்க மாட்டார்.



முதலில் நான் உங்கள் அல்லோபதி மருத்துவத்தை நிறுத்துகிறேன் என்று கூறும் ஹோமியோபதி மருத்துவரை நம்ப வேண்டாம்.



ஹோமியோபதி சிகிச்சையில் முன்னேட்றம் ஏற்பட்ட பிறகே அல்லோபதி மருந்துகளின் அளவை குறைக்கவும் என்று கூறும்  மருத்துவரே  உண்மையான ஹோமியோபதி மருத்துவர்.



நீங்கள் உங்கள் மருத்துவரிடம் உரையாடும்போது அவர் மற்றவர்   ஆலோசனை கேட்டாலும்பிற தொலைபேசி அழைப்புகளை  எடுத்தாலும் நீங்கள் அவரை தவிர்க்கவும்.



நல்ல ஹோமியோபதி மருத்துவர்உங்களுக்கு மருந்து   கொடுத்தவுடன்மூன்று நாட்களுக்கு பின் உங்களிடம் மாற்றம் உள்ளதோ என்று விசாரிப்பார்.



மேலும்ஹோமியோபதி சிகிச்சையானது யாதுஎவ்வாறு  குணமடைய   செய்யும் என்றும்ஹோமியோபதி மீண்டும்  எப்படி திரும்ப எடுக்க  வேண்டும் என்று கூறுவார்.



ஒரு குறிப்பிட்ட (Single Dose )  மருந்தை  Dry  Dose ஆக  மாதம்  ஒரு  முறை மட்டும் எடுத்தால் போதும் என்று மூன்று  மாதமும் ஒரு  முறை மட்டும் அதன் Dose- யை  மாற்றாமல் பொருத்துத்திருந்து   பார்ப்போம். என்று  செய்வது Hahnemann   கூறிய முறை அல்ல.



ஹோமியோபதி மருத்துவர் மாதம் ஒரு முறையாவது உங்கள் வருகைக்காக காத்திருப்பார்உங்களின் அறிகுறிகளை அறிய ஆவல்  கொடுத்தவராய் இருப்பார். மேலும்வாரம் ஒரு முறையாவது  தொலைபேசி மூலம் உங்களின் அறிகுறிகளை கண்காணிப்பார்அதன்  மூலம் உங்களின் மருந்தின் அளவும் மற்றும் வீரியமும் அதிகம்  செய்ய வேண்டுமா அல்ல குறைக்க வேண்டுமா என்று முடிவெடுப்பார்.



  உங்களின் முன்னேற்றத்தை உங்கள் மருத்துவரிடம் கூறும் போது இது  நான்  அறிந்ததே என்று கூறும் மருத்துவரை தவிர்க்கவும்.



அவசர காலத்தில்உங்கள் தொலைபேசியோ அல்லது மின்னஞ்சல்களுக்கும் எந்த ஒரு பதிலும் தராத மருத்துவரை தவிர்க்கவும்.



நீங்கள் படித்த கல்லூரியோஅல்லது  உங்களின் டிகிரியோ  அவர்களை மருத்துவர் என்று சொன்னாலும்அவர்கள் நோயாளிடத்து பழகும் விதத்தை பொருத்து மருத்துவர் என்று ஆவார். மேலும், அவர்கள் 20 வருடத்திற்கு முன்பே மருத்துவ படிப்பை முடித்திருந்தாலும், அவர்களை Experience  Doctor  என்றை அறிவார். ஆனால், நாம் அவர்களிடம் எதிர் பார்க்க வேண்டியது, அவர்கள் அந்த  20 ஆண்டு காலமும் மருத்துவத்தில் ஈடுபட்டாரா அல்லது தொழில்  ரீதியாக பயன்படுத்தினாரா என்பதை உண்மையில்  Experience  Doctor  யார் எனில், அவர்களில் சிகிக்சை செய்த நோயாளியை கேளுங்கள் விளைவு என்ன ? அவர்களை சந்திப்பது எளிதா ? அவர் உங்களை   எப்படி நடத்தினார் ? அவர்  ஒரு  மனித நேயமிக்கவரா ? நோயாளியின்   துன்பத்தை அவரால் அறிய  முடியுமா ? என்று கேட்டு தெரிந்துக்  கொள்ளுங்கள்.



எவர் ஒருவர் உங்கள் மருந்தை வாரம் வாரம்  மாற்றுகிறார்ளோ ,அல்லது அதிகமான மருந்துகளை  கொடுக்கிறார்களோ, அப்பேற்பட்ட   ஹோமியோபதி மருத்துவரை தவிர்க்க வேண்டும்.



நீங்கள் உங்களின் நாள்பட்ட பிரச்சனைக்கு மருந்து எடுத்துக்கொள்ளும்போதுஉங்களுக்கு கடுமையான பிரச்சனை வருகிறது என்றால்அதற்கு மருந்து தராமல் உங்களின் மருந்தை அதை சரி செய்து விடும் என்று கூறும் மருத்துவரை நம்ப வேண்டாம். அதற்கு காரணம் உங்களின் ஹோமியோபதி மருத்துவர் உங்களுக்கு தகுந்த காரணத்தை அளிப்பார்.



உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மருந்து மட்டும் போதும் என்று கூறும் ஹோமியோபதி மருத்துவரை நம்ப வேண்டாம்.



ஒரு வருடத்திற்குப் பிறகு எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல், மீண்டும் உங்களை பரிசோதித்து பழைய மருந்தையே தரும், பிடிவாத  நம்பிக்கையில் இருக்கும் ஹோமியோபதி மருத்துவரை நம்ப வேண்டாம்.



  ஒரு நல்ல ஹோமியோபதி, உங்களின் அனைத்து குறைகளையும் கண்டறிந்து ஒரு சிறப்பான மருந்தை தருவார். நோயின் விளக்கமும் மருந்தின் செயல்பாடும் புரியும்வண்ணம் எடுத்துரைப்பர். மேலும், அனைத்து கேள்விக்கும் பொறுமையுடன் பதில் அளிப்பர்.



எந்த ஒரு ஹோமியோபதி மருத்துவர் இரண்டு மருந்துகளை தந்து, ஒன்று காலையிலும், மற்றொன்று இரவிலும் எடுத்துகொள்ள சொல்கிறாரோ அவரை தவிர்க்கவும்.


சிறந்த ஹோமியோபதி மருத்துவர் என்பவர் மிகவும் இயல்பகவும் , மற்றும் உங்களின் உணர்சிக்கு மதிப்பும் மரியாதையும் தருபவராக இருப்பார். மேலும், பொறுமைசாலியாகவும், ஆலோசனை நேரத்திலும் நீங்கள் பேசும்போது எதிர்பேச்சு பேசாமல், முன்கூட்டிய உங்கள் மருந்தை தேர்வு செய்ய மாட்டார். சின்ன விஷயங்களாக இருந்தாலும் பொறுமையுடனும் ஆழ்ந்து கவனிப்பர். வேறு விதமாக கூறினால், அவர் ஹோமியோபதியையும் மக்களையும் மிகவும் நேசிப்பர். அவர் அவர் ஏழை, பணக்காரர் என்று பாராமல் தன் பொக்கிஷமான நேரத்தை நோயாளிகளுக்காக செலவழிப்பார்.



மேலும், எவர் ஒருவர் நோயாளியை, நோயாளியாக பார்க்காமல் சக மனிதராக பார்க்கிறோ அவரே உண்மையான ஹோமியோபதி மருத்துவர்.



சிறந்த ஆயுஷ் ஹோமியோபதி மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333 ( டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS )
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை –டாக்டர் .G. வர்தினி .,BHMS


Post Comment

வியாழன், ஜூன் 29, 2017

ஓஜஸ் எனும் உயிர்சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி -உயிர் ஆற்றல் -ஓஜஸ் 


டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .சுதா ., BAMS



உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்று பலரும் இப்போது ஆயுர்வேத மருத்துவத்தை நாடி வருகிறார்கள் .உடலின் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு மாத்திரையை தொடர்ந்து சாப்பிட கிடைத்து விடுமா ? வெறும் சத்து மாத்திரைகளை உண்டு வந்தால் அந்த நோய் எதிர்ப்பு சக்தி கூடி விடுமா ?. இந்த கேள்விக்கு பதில் நாம் ஓஜஸ் பற்றி தெரிந்து கொண்டால் கிடைத்து விடும்




ஆயுர்வேதத்தில் ஒஜஸ் என்பது சப்த தாதுக்களின் ( ஏழு தாதுக்கள் ) சாரம்சமாகும். ஆரோக்யமான உடலின் ஏழு தாதுக்களும் ஓஜஸின்- நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. உடலை நோயில் இருந்து விலக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.



ஓஜஸ் எங்கிருக்கிறது ?




உடல் முழுவதும் பரவி இருக்கிறது ..
இதயத்தை ஸ்தானமாக கொண்டு உடல் முழுவதும் பரவி உடலை இயக்குகின்றது


ஓஜஸ் குணம்:

ஸ்நிக்தம் - எண்ணெய்த்தண்மை
சோமாத்மகம் - நீர் போன்று
சந்த - தெளிவாக
ஈசத்லோனபீதகம் - கொஞ்சம் மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு




சரகரின் கூற்றுப்படி ஓஜஸ் 10 குணமுடையது.

குரு - கனமானது
சீத       -         குளிர்ச்சியானது
ம்ருது        -         மிருதுவான
ஷ்லக்ஹனம்        - மென்மையானது
பஹல       -        அடர்த்தியானது
மதுரம்        - இனிப்பு சுவையுடையது
ஸ்திரம் - திடமானது
ப்ரசன்னம் - தெளிவானது
பிச்சிலம் - பிசுக்குத்தன்மை
ஸ்நிக்தம் - எண்ணெய்த்தன்மை


ஓஜஸ் எப்படி இருக்கும் ?

நிறம் நெய் போன்றும் , சுவையானது தேன் போன்றும் , வாசம் வறுத்த நெய் போன்றும் இருக்கும்.


ஓஜஸ் எப்படி உருவாகிறது ?


ஓஜஸ் கரு வயிற்றில் உருவாகும்போதே உருவாகின்றது. கரு வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது. கரு வயிற்றில் இருக்கும்போதே ஓஜஸ் ஆனது அதனுடைய இடமான இதயத்தை சென்றடைகின்றது.

ஓஜஸ் என்னும் உயிர்சக்தி குறைவாக இருந்தால் மனிதனின் ஆயுட்காலமும் குறைவுதான்



ஓஜஸின் வகைகள் எத்தனை ?.

பர மற்றும் அபர என்று இரண்டு விதமான ஓஜஸ்கள் உண்டு.


பர ஓஜஸ் :

மிக முக்கியத்தவம் வாய்ந்த வாழ்க்கை சார்ந்து இருந்தது
இதயத்தை இடமாக கொண்டுள்ளது
அளவு : 8 சொட்டு


அபர ஓஜஸ்:

இது உடல் நலத்தை சார்ந்தது
இது உடல் முழுவதும் பரவி காணப்படும்
அளவு : அர்த்த அஞ்சலி ப்ரமானம் அதாவது அரை கை அளவு - 10 - 15 மிலி


ஓஜஸ் குறைய காரணங்கள்:

அளவுக்கு அதிகமான கோபம் , பசி , கவலை , பேராசை , பொறாமை , சோர்வு , அதிக உடற்பயிற்சி , அதிக உபவாசம் இருப்பது , அளவுக்கு குறைவாக உணவு உட்கொள்வது , மதுபழக்கம் , பயம் ,  கலப்பட உணவு , பழைய உணவுகள் , இரவில் கண் விழித்தல் , இரவு தூக்கத்தை தவிர்ப்பது , கெட்ட கிருமிகளின் தாக்குதல் , பாக்டீரியா மற்றும் நுண்கிருமிகள் , வைரஸ் தாக்குதல்கள் , விபத்துகள் மூலம் அதிகப்படியான இரத்தப்போக்கு , விந்து அதிகமாக விரயம் , விஷம் எடுத்துக்கொள்வது போன்றவற்றால் ஓஜஸ் ஆனது விரைவில் குறையக்கூடும்.


இப்படி குறையும்போது உடலில் உள்ள உயிர்சக்தியே இல்லாமல் போகின்றது
ஓஜோ நாசம் / சிதைவு


சுஷ்ருதசம்ஹிதா சூத்திர ஸ்தானத்தில் ஓஜோ சிதை 3 விதத்தில் நடைபெறுகிறது.


ஓஜோ விஸ்ரமம்

அறிகுறிகள்

சந்தி விஷ்லோஷனம் - அனைத்து  மூட்டுகளிலும் வலி மற்றும் மற்றும் பலகீனம்
காத்ரசத     -        விரைவில் தளர்ச்சி , களைப்பு அடைதல்
தோஷ்ச்யவன  -     உடலில் உள்ள அனைத்து தோஷங்களையும் அதிகரிக்கும்
க்ரிய சன்னிரோதம் - உடல் இயக்கங்கள் அனைத்தும் தடைபெறும்

ஓஜோ வயாபத்:

ஸப்த குருதாத்ரதா - உடல் கனமாகவும் மற்றும் இழுத்துப்பிடிப்பது
வாத சோபம் - வாததோஷ அதிகரித்து உடல் முழுவதும் கட்டிகளை உருவாக்கும்.
வர்ணபேதா - தோலில் கருந்திட்டுகள்
க்ளானி - விரைவில் சோர்வு
தந்ரா - களைப்பு , ஒழுங்கற்ற முறையில் உடல் உறுப்புகள் செயல்படும்
நிரே - அதிகப்படியான உறக்கம்


ஓஜோக்ஷயம்:

1. மூர்ச்சா - சுயநினைவு இல்லை
2. மாம்சக்‘யம் - உடல் தசை குறைப்பாடு
3. மோக - திரிபுணர்ச்சி
4. ப்ரலாப - பொருத்தமில்லாமல் பேசுவது , உளறுவது
5. மரணம் - மரணம்

இவ்வாறாக ஓஜஸ் உயிர்சக்தி நமது உடலில் குறையும் போது மரணத்தை எட்டுகிறது.


ஓஜஸை அதிகப்படுத்த செய்ய வேண்டியவை:

பால் , நெய் மற்றும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவு
யோகா , பிரணாயாமம் , உடற்பயிற்சி , மனபயிற்சி , மனதை ஒரு நிலைப்படுத்துதல்
இறைவனை வேண்டுதல்


ஆயுர்வேத மருந்துகள் :

ச்யவனப்ராஷ்
சாரஷ்வதாரிஷ்;டம்
ப்ரம்ம ரசாயனம்
அமலக இரசாயனம்
குடுச்சி ( சீந்தில் கொடி )
ஆம்லா ( நெல்லிக்காய் )
அஸ்வகந்த ( அமுக்கிரா கிழங்கு )
சதாவரி ( தண்ணீர்விட்டான் கிழங்கு )
திரிபலா ( நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் )
அஸ்வகந்தாரிஷ்டம்
பலாரிஷ்டம்
அஷ்வகந்தாதி லேகியம்
ஷீரபலா தைலம்
பலாஅஸ்வகந்தாதி தைலம்
மகாராஜாபிரசரின்யாதி தைலம்
சிலாது
மகா கல்யாணக க்ருதம்
ப்ரம்மி வடி

ஓஜஸ் –உயிர் சக்தியை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆலோனைக்கு
ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


Post Comment

செவ்வாய், ஜூன் 27, 2017

நீங்கள் அடுத்த வீட்டின் அந்தரங்கத்தை எட்டி பார்பவரா ?

உங்களது வீட்டில் நடப்பவற்றை யாராவது திருட்டுத்தனமாய் பார்க்க அனுமதிப்பீர்களா ?


டாக்டர் .அ .முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA


ஒட்டு கேட்பது குற்றமா ?

மறைந்து இருந்து நோட்டம் விடும் பழக்கம் பெரிய நோயா ?


ஒரு செயல் அதை  செய்யும் போது குற்ற உணர்வு உங்களுக்கு வரும் என்றால் அது ஒரு தவறாகத்தான் இருக்க முடியும் . மனித உணர்வுகள் புனிதமானவை ..மீடியாக்கள் –டிவி நிகழ்சிகள் அனைத்தும் நாம் செய்வது குற்றம் என்ற உணர்வுக்கே வர முடியாமல் தொடர வைத்து விடுகிறது .




இப்போது நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக நூல் பக்கத்தில் உள்ள வீடியோக்களை எதேச்சையாக பார்க்கும் போது கவனித்த விஷயம் –அந்த வீடியோவின் பார்வையாளர்கள் கிட்டத்தட்ட எழு லட்சம். நான் அந்த தொலை காட்சியின் டி ர் பி யை பற்றி கணக்கு எடுக்கவே இல்லை . நம்மை அடுத்த வீட்டை எட்டிபார்க்கும் ஒரு மிக மோசமான் ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை நமது மனதில் குப்பையாக விதைக்கபோகிறோம் .









நீங்கள் மன நோயாளியாக மாற விரும்புவீர்களா ?

  • அடுத்தவரை ஒப்பிட்டு வாழ்வதே நமது எல்லா மன நோய்க்கும் காரணம்


  • மற்றவரின் அந்தரங்கம் அறிந்து கொள்வது சரி என்று பட கூடிய மோசமான மன நிலைக்கு தள்ளபடுவோம்


  •  கீழ்த்தரமான மன நிலையை மாற்றாமல் நாம் செய்யும் தவறுக்கு நாம் வக்கீலாகவும் ,அடுத்தவர் தவறுக்கு நீதிபதியாகவும் மாறி –குறையை ஒத்து கொள்ளாத மன நிலைக்கு தள்ளபடுவோம்


  • அடிமையாகி விடுவோம் – நம்மை நமது மன நிலையை தூய்மையாக்க முடியாது என்ற நிலைக்கும் –அடுத்து என்ன ? என்று நமது நேரத்தை குப்பையாக்கி அடிமையாய் கிடப்போம்


  • பாசம் ,பணிவு ,அன்பு ,உறவுகள் என்ற சொற்கள் இனி கனவு உலகத்தில் மட்டுமே இருக்கபோகிறது .நிகழ் உலகத்தை மறந்து  நிழல் உலகத்தில் மீள முடியா மன நோயாடு வாழ்வோம்


  • உயிர் போகும் அளவுக்கு கண் முன் பிரச்சனை இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் நமது கவனம் வேறு எதை நோக்கியோ பயணிக்கும் ..


  • நமது பாரம்பரியத்தில் –கலாசார அடையாளம் எல்லாம் இழந்து வெறும் சதை பிணங்களாய் வாழ்வோம் . நீச்சல் உடை அணிந்து நடு வீட்டில் இருக்கலாம் என்ற மேற்கத்திய கலாசாரம் இதன் மூலம் புகுத்த படும் போது நமது சுய அடியாளம் இழந்து பரதேசிகளாய் மாறிப்போவோம்


  • காசுக்காக எதை செய்யவோம் துணிவோம் ..பணம் எல்லாம் செய்யும் என்ற மன அமைதி இல்லா நிலைக்கு தள்ளபடுவோம்


  • Moral Value , Attitude எல்லாம் தலை கீழாய் மாறிபோகும் –வாழ்க்கை சீரழிந்து போகும்


  • இது என்னை பாதிக்காது என்று உங்களது மன நிலைக்கு மட்டும் தான் தள்ள படுவீர்கள்


  • சம தோஷ சம தாது ..பிரசன்ன ஆத்மேந்திர்ய மன என்ற –ஆரோக்யமான மன நிலை என்று ஒன்று எதுவும் இருக்க போவதில்லை ..நமது மனம் கேவலமான மன நிலைக்கு வந்து அதுவே இல்ல உடல் மன நோய்க்கும் காரணமாய் மாறி விடும்


பொழுதுபோக்கு நமது ஆயுள் முழு பொழுதையும் போக்கிவிடும் பயன் இல்லாமல் –நோயுடன் ..நீங்கள் இந்த வலையில் சிக்க விரும்புகிறீர்களா ?

நிகழ் காலத்தில் –உணர்வோடு –அமைதியோடு வாழ இயற்கை சித்தாந்தகளை கடைபிடிப்போம் .மெய் உணர்வோடு வாழ்வோம் .
இயற்கை ஆயுஷ் மருத்துவம் மற்றும் மன நல ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )






Post Comment